TNPSC Tamil Notes - 6th Std

Tnpsc Study Material Tamil – 6th Standard

6 வது வகுப்பு:

செய்யுள்:
1.வாழ்த்து - திருவருட்பா
திருவருட்பா:
* எழுதியவர்    : இராமலிங்க அடிகளார்

ஆசிரியர் குறிப்பு :
* சிறப்பு பெயர்: திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறந்த ஊர் : கடலூர் மாவட்டம் - மருதூர்
* பெற்றோர்  : இராமையா - சின்னம்மையார்
* வாழ்ந்த காலம்: 05.10.1823 முதல் 30.01.1874
* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
* இராமலிங்க அடிகளார் அமைத்தது
    - அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக - சன்மார்க்க சங்கம்
    - பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க - அறச்சாலை(வடலூர்)
    - அறிவு நெறி விளங்க நிறுவியது - ஞானசபை
* பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர்
* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர்